Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து ரெயில்களும் திருவொற்றியூரில் நின்று செல்ல நடவடிக்கை: ஏ.ஜி. மவுரியா

ஏப்ரல் 11, 2019 10:19

சென்னை: வடசென்னை பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஏ.ஜி.மவுரியா தொகுதி முழுவதும் எளிமையான முறையில் பிரசாரம் செய்து வருகிறார்.  

வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், திருவொற்றியூர் குப்பம், மார்க்கெட் காலடிப்பேட்டை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்த மவுரியா அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றி கேட்டறிந்தார்.  

தெற்கு பகுதியில் இருந்து வரும் ரெயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதுபோல, வடக்கில் இருந்து வரும் ரெயில்கள் திருவொற்றியூரில் நிற்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.  

மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தீர்க்கப்படும் என்றும் கூறினார். டார்ச் லைட் சின்னத்துடன் ஆடம்பரமின்றி மவுரியா எளிமையாக பிரசாரம் செய்வது மக்களை கவர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்